திருவொற்றியூரில் மாசி மகத் திருநாளன்று நடந்தேறும் அதிசயத் திருமணம் (மகிழடி உற்சவ நிகழ்வு):

ஆண்டுதோறும் மாசி மகத் திருநாளன்று திருவொற்றியூர் தியாகராஜர் திருக்கோயில் வளாகத்தில், தல விருட்சமான மகிழ மரத்திற்கடியில், சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாருக்கு 'உன்னைப் பிரியேன்' என்று வாக்களிக்கும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் சிறப்புற நடந்தேறும். நாயன்மார்கள் அனைவரும் தத்தமது உற்சவத் திருமேனிகளில் இவ்விடத்திற்கு எழுந்தருளி வந்து, மண விழாவில் பங்கேற்று மகிழ்வர். கண் கொண்ட பயனாய் நம் சுந்தரனாரின் இவ்வுற்சவத்தினைத் தரிசித்துப் போற்றுவோம்.

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 260)
தாவாத பெருந்தவத்துச் சங்கிலியாரும் காண
மூவாத திருமகிழை முக்காலும் வலம்வந்து
மேவா(து) இங்(கு)யான்அகலேன் எனநின்று விளம்பினார்
பூவார்தண் புனற்பொய்கை முனைப்பாடிப் புரவலனார்.


No comments:

Post a Comment