4. கச்சி அனேகதங்காவதம்:

காஞ்சியில் அமைந்துள்ள தேவாரத் தலங்கள் ஐந்து (கச்சி ஏகம்பம், கச்சி மேற்றளி, ஓணகாந்தன் தளி, கச்சி அனேகதங்காவதம், கச்சிநெறிக் காரைக்க்காடு). 

'அனேகதம்' எனும் பதம் யானையைக் குறிக்கும், வேழ முகத்து தெய்வமான நம் விநாயகப் பெருமான் தன் திருக்கரங்களாலேயே சிவலிங்கத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து பூசித்த தலமாதலால் அனேகதங்காவதம். சுந்தர மூர்த்தி சுவாமிகளால் பாடல் பெற்ற சிறப்புப் பொருந்தியது. இறைவரின் திருநாமம் அனேகதங்காவதீஸ்வரர், காண்பதற்கரிய பேரழகுத் திருக்கோலம். 

(சுந்தரர் தேவாரம் - திருப்பாடல் 1)
தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெருமானதிடம்; திகழ் ஐங்கணையக்
கோனை எரித்தெரியாடி இடம்; குலவானதிடம்; குறையா மறையா
மானை இடத்ததொர் கையன் இடம்; மத(ம்) மாறுபடப் பொழியும் மலைபோல்
ஆனையுரித்த பிரானதிடம்; கலிக்கச்சி அனேகதங்காவதமே


No comments:

Post a Comment