3. ஓணகாந்தன் தளி:

காஞ்சியில் அமைந்துள்ள தேவாரத் தலங்கள் ஐந்து (கச்சி ஏகம்பம், கச்சி மேற்றளி, ஓணகாந்தன் தளி, கச்சி அனேகதங்காவதம், கச்சிநெறிக் காரைக்க்காடு). 

பாணாசுரனுடைய சேனாதிபதிகளான ஓணன்; காந்தன் எனும் இருவரும் பூசித்துப் பேறு பெற்றுள்ள தலம். சிவபெருமான் இங்கு ஓணேஸ்வரர்; காந்தேஸ்வரர் எனும் இருவேறு திருக்கோலங்களில், தனிச்சன்னிதிகளில் எழுந்தருளி இருக்கின்றார். ஆலய வளாகத்தில் தனிக்கோயில் போன்றதொரு அமைப்பில் எழுந்தருளியுள்ள சலந்தரேஸ்வர் பிற்காலப் ப்ரதிஷ்டையாகும். சுந்தரர் பொன் பெற்ற தலங்களுள் ஒன்று, தேவார மூவரில் சுந்தரரால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. இங்கு எழுந்தருளியுள்ள 'வயிறுதாரிப் பிள்ளையாரை' சுந்தரனார் 2ஆம் திருப்பாடலில் குறித்துள்ளார், 

(சுந்தரர் தேவாரம் - திருப்பாடல் 1):
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசனை செய்யலுற்றார்
கையிலொன்றும் காணமில்லைக் கழலடி தொழுதுய்யினல்லால்
ஐவர் கொண்டிங்காட்ட ஆடி ஆழ்குழிப் !பட்டழுந்துவேனுக்
குய்யுமாறொன்றருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளியுளீரே!!!



No comments:

Post a Comment