நரி பரியாக்கிய படலம் (அப்பர் தேவார நுட்பங்கள்- பகுதி 10)

சோமசுந்தரக் கடவுள் மணிவாசகப் பெருமானின் பொருட்டு நரிகளைப் பரிகளாக்கி நிகழ்த்தியருளிய அற்புதத் திருவிளையாடலை நம் அப்பர் சுவாமிகள் பின்வரும் இரு திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றியுள்ளார், 

(1)
('கரைந்து கை தொழுவாரையும்' - திருவீழிமிழலை தேவாரம் - திருப்பாடல் 8)
எரியினார் இறையார் இடுகாட்டிடை
நரியினார் பரியா மகிழ்கின்றதோர்
பெரியனார் தம் பிறப்பொடு சாதலை
விரியினார் தொழும் வீழி மிழலையே

(2)
('பாடிளம் பூதத்தினானும்' - திருவாரூர் தேவாரம் - திருப்பாடல் 2)
நரியைக் குதிரை செய்வானும்; நரகரைத் தேவு செய்வானும்
விரதம் கொண்டாட வல்லானும்; விச்சின்றி நாறு செய்வானும்
முரசதிர்ந்(து) ஆனை முன்னோட முன்பணிந்(து) அன்பர்களேத்த
அரவரைச் சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

No comments:

Post a Comment