திருஆலவாய் எனும் மதுரை ஷேத்திரத்தில், எளிய ஆதிசைவ இளைஞரான தருமி எனும் அடியவருக்குப் பாண்டிய வேந்தன் பரிசறிவித்த பொற்கிழியை உரித்தாக்கும் பொருட்டு, சோமசுந்தரப் பெருங்கடவுள் புரிந்தருளிய அற்புதத் திருவிளையாடலை நம் அப்பர் சுவாமிகள் பின்வரும் திருப்பாடலில் பதிவு செய்து போற்றுகின்றார்,
('புரிந்தமரர் தொழுதேத்தும்' என்று துவங்கும் திருப்புத்தூர் தேவாரம் - திருப்பாடல் 3)
மின்காட்டும் கொடி மருங்குல் உமையாட்கென்றும்
விருப்பவன்காண்; பொருப்பு வலிச்சிலைக் கையோன் காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக் கிழி தருமிக்(கு) அருளினோன் காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டும் செழும்புறவின் திருப்புத்தூரில்
திருத்தளியான் காண்; அவனென் சிந்தையானே!!!
('புரிந்தமரர் தொழுதேத்தும்' என்று துவங்கும் திருப்புத்தூர் தேவாரம் - திருப்பாடல் 3)
மின்காட்டும் கொடி மருங்குல் உமையாட்கென்றும்
விருப்பவன்காண்; பொருப்பு வலிச்சிலைக் கையோன் காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக் கிழி தருமிக்(கு) அருளினோன் காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டும் செழும்புறவின் திருப்புத்தூரில்
திருத்தளியான் காண்; அவனென் சிந்தையானே!!!
No comments:
Post a Comment