நம் அப்பர் சுவாமிகள் சுமார் 20 முதல் 30 திருப்பாடல்களில் கந்தப் பெருமானைப் பல்வேறு திருநாமங்களால் குறிப்பிட்டு மகிழ்ந்துள்ளார். இவற்றுள் 'நம் கடம்பனை', 'நம் செந்தில் மேய' என்று நெருக்கம் கலந்த உரிமையோடு குறிக்கும் சொற்பிரயோகங்கள் மிக இனிமையானவை, நெகிழ்விக்கக் கூடியவை. இனி இப்பதிவில் கந்தவேளைக் குறிக்கும், இவ்விதமான சிறப்புச் சொல்லாடல்களோடு கூடிய 10 திருப்பாடல்களைச் சிந்தித்து மகிழ்வோம்,
(1) ('வடியேறு திரிசூலம்' என்று துவங்கும் திருப்பூவணம் தேவாரம்: திருப்பாடல் 4)
பன்னிரண்டு கையுடைய பிள்ளை தோன்றும்
(2) ('வேழம்பத்(து) ஐவர்' என்று துவங்கும் திருக்கோழம்பம் தேவாரம் - திருப்பாடல் 10)
சமர சூரபன்மாவைத் தடிந்த வேற்குமரன் தாதை
(3) ('மாசிலொள்' என்று துவங்கும் திருவதிகை தேவாரம் - திருப்பாடல் 5)
விரி நீர்பரவைச் சூரட்ட வேலவன் தாதை
(4) ('மறையணி நாவினானை' என்று துவங்கும் திருப்பெருவேளூர் தேவாரம் - திருப்பாடல் 3)
குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை
(5) ('மின்னும் சடை' என்று துவங்கும் திருஅரிசிற்கரைப்புத்தூர் தேவாரம் - திருப்பாடல் 6)
வள்ளி முலைதோய் குமரன் தாதை
(6) ('தூண்டு சுடரனைய' என்று துவங்கும் திருமறைக்காடு தேவாரம் - திருப்பாடல் 4)
நம் செந்தில் மேய வள்ளி மணாளற்குத் தாதை
(7) ('ஒன்றுகொலாம்' என்று துவங்கும் பொதுப் பதிகம் - திருப்பாடல் 6)
ஆறுகொலாம் அவர்தம் மகனார் முகம்
(8 ) ('அல்லிமலர்' என்று துவங்கும் திருஇன்னம்பர் தேவாரம் - திருப்பாடல் 2)
'கோழிக் கொடியோன்தன் தாதை போலும்'
(9) ('அரவணையான்' என்று துவங்கும் திருவதிகை தேவாரம் - திருப்பாடல் 1)
சரவணத்தான் கைதொழுது சாரும்அடி
(10) ('தளரும் கோளரவத்தோடு' என்று துவங்கும் கடம்பூர் தேவாரம் - திருப்பாடல் 9)
நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
No comments:
Post a Comment