பிட்டுக்கு மண் சுமந்த பரம்பொருள் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 9)

'வந்தி' எனும் மூதாட்டிக்கு அருளும் பொருட்டு சோமசுந்தரப் பெருங்கடவுள் 'பிட்டுக்கு மண் சுமந்து சென்ற' அற்புதத் திருவிளையாடலை நம் அப்பர் பெருமானார் 'வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமும் தோன்றும்' என்று பின்வரும் திருப்பூவணத் திருப்பாடலில் போற்றியுள்ளார். மணிவாசகப் பெருந்தகையார் அப்பர் சுவாமிகளின் அவதாரக் காலத்திற்கு மிக முற்பட்டவர் என்பதற்கு இத்திருப்பாடல் வரிகள் மற்றுமோர் அகச் சான்று.

(திருப்பூவண தேவாரம்: 'வடியேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்' - திருப்பாடல் 9)
அருப்போட்டு முலைமடவாள் பாகம் தோன்றும்
    அணிகிளரும் உருமென்ன அடர்க்கும் கேழல்
மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்
    மணமலிந்த நடம்தோன்றும்; மணியார் வைகைத்
திருக்கோட்டில் நின்றதோர் திறமும் தோன்றும் 
    செக்கர்வான் ஒளிமிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்போட்டி நின்றதிண் புயமும் தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

No comments:

Post a Comment